search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாசடைந்த 351 நதிகளை தூய்மையாக்க கண்காணிப்பு குழு - பசுமை தீர்ப்பாயம் அமைத்தது
    X

    மாசடைந்த 351 நதிகளை தூய்மையாக்க கண்காணிப்பு குழு - பசுமை தீர்ப்பாயம் அமைத்தது

    மாசடைந்த 351 நதிகளை தூய்மைப்படுத்தி மாசற்றதாக ஆக்க தேசிய திட்டம் வகுப்பதற்காக மத்திய கண்காணிப்பு குழு ஒன்றை தீர்ப்பாயம் அமைத்தது. #RiverPollution #NGT
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 351 நதிகள் மிக மோசமாக மாசடைந்து இருப்பதாகவும், தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அவை அச்சுறுத்தலாக இருப்பதாகவும் ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது. அதை தேசிய பசுமை தீர்ப்பாயம், தானே முன்வந்து ஒரு வழக்காக எடுத்துக்கொண்டுள்ளது.

    இந்த வழக்கு, தீர்ப்பாய தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாசடைந்த 351 நதிகளை தூய்மைப்படுத்தி மாசற்றதாக ஆக்க தேசிய திட்டம் வகுப்பதற்காக மத்திய கண்காணிப்பு குழு ஒன்றை தீர்ப்பாயம் அமைத்தது.

    அதில், நிதி ஆயோக் பிரதிநிதி, மத்திய அமைச்சக செயலாளர்கள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்று தீர்ப்பாயம் கூறியது. இக்குழுவின் முதல் கூட்டம் ஜூன் 30-ந்தேதி நடத்தப்பட வேண்டும் என்றும், ஜூலை 31-ந்தேதிக்குள் தங்களிடம் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #RiverPollution #NGT
    Next Story
    ×