search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்சியை விட்டும் அரசியலை விட்டும் மோடி தூக்கி எறியப்பட வேண்டும் - மம்தா ஆவேசம்
    X

    ஆட்சியை விட்டும் அரசியலை விட்டும் மோடி தூக்கி எறியப்பட வேண்டும் - மம்தா ஆவேசம்

    பாராளுமன்ற தேர்தலின் மூலம் ஆட்சியை விட்டும் அரசியலை விட்டும் நரேந்திர மோடி தூக்கி எறியப்பட வேண்டும் என மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். #LokSabhaElections2019 #Mamata #Modi #throwModi
    கொல்கத்தா:

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி அம்மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டம், நக்ரக்கட்டா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.

    பிரதமர்  நரேந்திர மோடி தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் நான்கரை ஆண்டு காலத்தை வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் கழித்து விட்டார். விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்களின் பிரச்சனைகளை கவனிக்க அவருக்கு நேரம் இருந்தது இல்லை என குற்றம்சாட்டினார்.

    ‘கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட வேளையிலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பலர் உயிரிழந்தபோதும், பல கோடி பேர் வேலைவாய்ப்புகளை இழந்தபோதும் அவர் எங்கே போய் இருந்தார்?



    தேர்தல் நெருங்குவதால் இப்போது உங்கள் வீட்டின் கதவை ஓட்டுக்காக தட்டும் அவர், வாய்க்கு வந்த பொய்களை எல்லாம் உளறிக்கொண்டிருக்கிறார். ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார். பொய் பேசுவதற்கு ஒரு போட்டி வைத்தால் மோடிக்குதான் முதல் பரிசு கிடைக்கும். இந்த தேர்தலிலும் பொய் பேசாதவாறு மோடியின் வாயை ஒட்டிவைக்க வேண்டும்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் நமது  நாட்டின் நலன் கருதி ஆட்சியை விட்டும் அரசியலை விட்டும் நரேந்திர மோடி தூக்கி எறியப்பட வேண்டும்’ எனவும் மம்தா தெரிவித்தார். #LokSabhaElections2019 #Mamata #Modi #throwModi 
    Next Story
    ×