என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் தாயின் இரண்டாவது கணவரால் தாக்கப்பட்ட சிறுவன் பலி
Byமாலை மலர்6 April 2019 10:42 AM GMT (Updated: 6 April 2019 10:42 AM GMT)
கேரளாவில் தாயின் இரண்டாவது கணவரால் சரமாரியாக தாக்கப்பட்ட 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். #KeralaBoyDead
கொச்சி:
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா பகுதியில் தாய் இறந்து 10 மாதங்கள் ஆன நிலையில், 2 சிறுவர்கள் தாயின் இரண்டாவது கணவன் அருண் ஆனந்த்(36) உடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் 28ம் தேதி, 4 வயது சிறுவன் அதிகாலையில் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அருண், அந்த சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளான்.
இதை தடுக்க அந்த சிறுவனின் அண்ணன் (வயது 7) முயற்சித்தான். இதையடுத்து ஆத்திரமடைந்த அருண், 7 வயது சிறுவனை அலமாரியில் மோதி, பின்னர் அருகிலிருந்த வாக்கிங் ஸ்டிக் கொண்டு பலமாக தாக்கினான். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் உடல் முழுவதும் காயங்கள், இரத்தப்போக்கு மற்றும் நுரையீரல் கடுமையாக பாதிப்புக்குள்ளானது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 2 சிறுவர்களையும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அருண் ஆனந்தை போலீசார் கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சிறுவர்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த திங்கள் அன்று சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது. #KeralaBoyDead
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா பகுதியில் தாய் இறந்து 10 மாதங்கள் ஆன நிலையில், 2 சிறுவர்கள் தாயின் இரண்டாவது கணவன் அருண் ஆனந்த்(36) உடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் 28ம் தேதி, 4 வயது சிறுவன் அதிகாலையில் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அருண், அந்த சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளான்.
இதை தடுக்க அந்த சிறுவனின் அண்ணன் (வயது 7) முயற்சித்தான். இதையடுத்து ஆத்திரமடைந்த அருண், 7 வயது சிறுவனை அலமாரியில் மோதி, பின்னர் அருகிலிருந்த வாக்கிங் ஸ்டிக் கொண்டு பலமாக தாக்கினான். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் உடல் முழுவதும் காயங்கள், இரத்தப்போக்கு மற்றும் நுரையீரல் கடுமையாக பாதிப்புக்குள்ளானது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 2 சிறுவர்களையும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அருண் ஆனந்தை போலீசார் கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சிறுவர்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த திங்கள் அன்று சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது. #KeralaBoyDead
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X