search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேர்மையான ஆட்சியா? ஊழல் ஆட்சியா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர் மோடி
    X

    நேர்மையான ஆட்சியா? ஊழல் ஆட்சியா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர் மோடி

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, ஒடிசாவில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி, நேர்மையான ஆட்சியா? அல்லது ஊழல் ஆட்சியா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என கூறியுள்ளார். #PMModi #LoksabhaElections2019
    சுந்தர்கார்க்:

    ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுந்தர்கார்க் பகுதியில், பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    இந்த முறை ஒடிசாவில் தாமரை மலர்ந்தே தீரும். வெற்றியை பாஜக அள்ளிப்பருகும்.  ஒடிசா மாநிலத்தில் இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை மலரும் என்று நான் பெருமையுடம் சொல்லுவேன். அதேப்போல் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. பாஜக நாட்டின் வலிமையான மற்றும் தீர்க்கமான கட்சியாகும். நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாஜக செயல்படுகிறது. எனவே நேர்மையான ஆட்சி தேவையா? அல்லது  ஊழல் ஆட்சி தேவையா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

    நாட்டிற்கும், ஒடிசாவிற்கும் வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் நல்ல எதிர்காலத்தை உருவாக்கப்போகிறது.  தொண்டர்களின் கடுமையான உழைப்பிலும், வியர்வையிலும் உருவானது தான் இந்த பாஜகவே தவிர, பணத்தினாலோ அல்லது வாரிசு முறையிலோ உருவாக்கப்படவில்லை. தற்போதும் தொண்டர்களின் வியர்வையினால் தான் வளர்ந்து வருகிறது.  எனவே தான் இன்று நாட்டில், மிகப்பெரிய ஜனநாயக கட்சியாக பாஜக  விளங்குகிறது. 

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019
    Next Story
    ×