search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் நடனப்பெண் கற்பழிப்பு - 3 பேர் கைது
    X

    டெல்லியில் நடனப்பெண் கற்பழிப்பு - 3 பேர் கைது

    டெல்லியில், ஹரியானாவச் சேர்ந்த நடனப்பெண்ணை கற்பழித்த 3 பேர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். #ThreemenArrested
    புது டெல்லி:

    ஹரியானாவைச் சேர்ந்த நடனப்பெண் (20) டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக 6 நாட்களுக்கு முன் டெல்லிக்கு செல்ல, பேருந்தின் மூலம் ஹரியானாவில் இருந்து காஷ்மீர் எல்லைப்பகுதியை வந்தடைந்தார்.

    அப்போது அப்பகுதியில் காரில் வந்த லோகேஷ்(21), ஓம்(25), ரிஷிகேஷ்(25) ஆகியோர், அங்கிருந்து நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் கஜூரி காஸ் பகுதிக்கு அழைத்துச் செல்வதாக அப்பெண்ணிடம் கூறியுள்ளனர். இதனை நம்பி அந்தப்பெண்ணும் காரில் ஏறியுள்ளார்.

    இந்நிலையில் கார், பவானா பகுதியை அடைந்தபோது, அந்தப்பெண்ணை அருகில் தனியே இருந்த வீட்டிற்கு கொண்டு சென்று, கற்பழித்துவிட்டு செல்போனையும் பறித்து விட்டுச் சென்றனர்.

    இதனையடுத்து லோகேஷ்(21), ஓம்(25), ரிஷிகேஷ்(25) ஆகிய மூன்று பேரையும் நேற்று டெல்லி போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  #ThreemenArrested

    Next Story
    ×