என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வயநாடு தொகுதியில் நாளை மறுதினம் ராகுல் காந்தி வேட்பு மனுதாக்கல்
Byமாலை மலர்2 April 2019 11:33 AM GMT (Updated: 2 April 2019 11:33 AM GMT)
பாராளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாளை மறுதினம் அங்கு வேட்பு மனுதாக்கல் செய்கிறார். #LSpolls #Congress #RahulGandhi #Wayanad #PriyankaGandhi
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடுமுழுவதும் நடைபெறுகிறது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட வேலைகளில் துரித கதியில் ஈடுபட்டு வருகின்றன.
நாடு முழுவதும் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் கட்சியின் முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி தெரிவித்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அமேதியை தொடர்ந்து கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாளை மறுதினம் அங்கு வேட்பு மனுதாக்கல் செய்கிறார். அப்போது அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடன் செல்கிறார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #LSpolls #Congress #RahulGandhi #Wayanad #PriyankaGandhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X