என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்த ஆண்டுக்குள் 30 விண்வெளி திட்டங்கள் முடிக்கப்படும் - இஸ்ரோ தலைவர்
Byமாலை மலர்2 April 2019 3:06 AM GMT (Updated: 2 April 2019 3:06 AM GMT)
இந்த ஆண்டுக்குள் 30 விண்வெளி திட்டங்கள் முடிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். #ISRO #Sivan
ஸ்ரீஹரிகோட்டா:
பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. முதல்முறையாக 3 புவிவட்டபாதையில் செயற்கைகோள்களை நிலை நிறுத்தி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:
பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. முதல்முறையாக 3 புவிவட்டபாதையில் செயற்கைகோள்களை நிலை நிறுத்தி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:
ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு செயற்கைக்கோள்கள் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. முதன்முறையாக மூன்று வெவ்வேறு சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ராக்கெட்டின் நான்காவது நிலை மீண்டும் ரீ-ஸ்டார்ட் செய்யப்பட்டு 485 கிலோமீட்டர் தூரத்தில் சோதனை முயற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நான்காவது நிலை சோதனை முயற்சியில் மூன்று முக்கிய செயற்கைகோள் உள்ளன. குறிப்பாக ஐ.ஐ.எஸ்.டி. மாணவர்களது செயற்கைகோள் இதில் செலுத்தப்பட்டுள்ளது. நான்காவது நிலை சோதனை முயற்சி, மாணவர்களது ஆராய்ச்சி திறனை வளர்க்கும் வகையில் இலவசமாக இஸ்ரோ செய்து வருகிறது. பி.எஸ்.எல்.வி. சி-45 வெற்றிக்கு உழைத்த இஸ்ரோ குழுவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.
95 சதவீத ராக்கெட் தயார் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் 60-70 சதவீத உதிரிபாகங்கள் பெங்களூருவில் உள்ள தொழிற்சாலையில் வாங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்களும் இந்த திட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளனர். மேலும் இந்த ராக்கெட் ஏவுதலை 1,200 பொதுமக்கள் நேரடியாக கண்டு களித்தனர். அடுத்த ராக்கெட் ஏவுதலை 5 ஆயிரம் பேர் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது மேலும் 10 ஆயிரமாக அதிகரிக்கும்.
வரும் மே மாதம் 2-வது வாரத்துக்கு மேல் எட்டாம் வகுப்பு முடித்துள்ள 108 மாணவர்கள் இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்துக்கு வரவுள்ளனர். அவர்களுக்கு 15 நாட்கள் பயிற்சியாக விண்வெளி தொழில்நுட்பம், ராக்கெட் தொழில்நுட்பம், செயற்கைக்கோள்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் உருவாகுவர். மே மாத நடுவில் பி.எஸ்.எல்.வி. சி-46, அடுத்து பி.எஸ்.எல்.வி. சி-47 மேலும் சந்திரயான்-2 ஆகிய திட்டங்கள் உள்ளன. இந்த வருடத்துக்குள் 30 விண்வெளி திட்டங்களை முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #ISRO #Sivan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X