search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர்கள் கை விரலில் வைக்க ரூ.33 கோடிக்கு அழியாத மை
    X

    வாக்காளர்கள் கை விரலில் வைக்க ரூ.33 கோடிக்கு அழியாத மை

    கடந்த பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் தற்போது வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து அழியாத மை பாட்டில்கள் வாங்குவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ரூ.33 கோடி செலவு செய்துள்ளது. #LSPolls #IndelibleInk
    புதுடெல்லி:

    தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை செய்து முடித்து விட்டனர் என்பதை உறுதிப்படுத்த அவர்களுக்கு அடையாள மை வைக்கப்படும்.

    வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் இந்த மை வைக்கப்படும். இது அழிக்க முடியாத மையாகும்.

    வாக்காளர், வாக்களித்து விட்டார் என்பதை குறிப்பேடு மட்டுமின்றி மீண்டும் கள்ள ஓட்டு போட முயற்சி செய்வதை கைவிரலில் வைக்கப்படும் அழியாத அடையாள மை மூலம் தடுக்க முடியும். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு, மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்டால், வாக்காளர்களின் வலது கை ஆள் காட்டி விரலில் அழியாத மையை தேர்தல் அதிகாரிகள் வைப்பார்கள்.

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது 534 தொகுதிகளிலும் 21.5 லட்சம் அழியாத மை பாட்டில்கள் வாங்கி பயன்படுத்தப்பட்டன. தற்போது நாடு முழுவதும் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவே கூடுதலாக அழியாத மை பாட்டில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது.



    அதன்படி தற்போது 26 லட்சம் அழியாத மை பாட்டில்களை தலைமை தேர்தல் ஆணையம் வாங்கியுள்ளது. கடந்த தேர்தலை விட 4.5 லட்சம் மை பாட்டில்கள் அதிகமாகும். இந்த மை பாட்டில்கள் வாங்குவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ரூ.33 கோடி செலவு செய்துள்ளது.

    இந்த மை பாட்டில்கள் ஒவ்வொன்றிலும் பத்து மில்லி லிட்டர் அழியாத மை இருக்கும். இந்த அழியாத மையை கர்நாடகா மாநில அரசுக்கு சொந்தமான மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னீஷ் நிறுவனம் மட்டுமே தயாரித்து வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிறுவனத்தின் மை 7 கட்ட தேர்தலின்போதும் சுமார் 90 கோடி வாக்காளர்களின் கை விரல்களில் வைக்கப்பட இருக்கிறது. #LSPolls #IndelibleInk
    Next Story
    ×