என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடியை தோற்கடியுங்கள், இல்லையேல் அவர்தான் எப்போதும் பிரதமர்: கெஜ்ரிவால்
Byமாலை மலர்25 March 2019 1:33 AM GMT (Updated: 25 March 2019 1:33 AM GMT)
இந்த தேர்தலில் மோடியை தோற்கடியுங்கள், இல்லையேல் அவர்தான் நிரந்தர பிரதமராக இருப்பார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். #PMModi #ArvindKejriwal
புதுடெல்லி :
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்களை தொகுத்து எழுதப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழா, டெல்லியில் நடைபெற்றது. அதில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
இன்றைய தினம் மோடி அரசை யார் கேள்வி கேட்டாலும், ‘தேச விரோதி’ என்று முத்திரை குத்துகிறார்கள். டெல்லி அருகே குர்கானில் ஒரு முஸ்லிம் குடும்பம் தாக்கப்பட்டுள்ளது. எந்த காரணமும் இல்லாமல், சிறுபான்மையினர் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மோடி அரசு, ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் கொள்கையை பின்பற்றுகிறது.
இந்த தேர்தலில், என்ன விலை கொடுத்தாவது மோடி அரசை மீண்டும் வரவிடாமல் தடுப்பதே ஒவ்வொரு தேச பக்தரின் நோக்கமாக இருக்க வேண்டும். மோடியை நிச்சயம் தோற்கடிக்க வேண்டும்.
ஒருவேளை, மோடி மீண்டும் பிரதமரானால், அதன்பிறகு தேர்தலே நடத்தப்படாது. மோடியே நிரந்தர பிரதமராக எப்போதும் இருப்பார்.
அந்த அளவுக்கு ஜனநாயகமே முடிவுக்கு வந்து விடும்.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். #PMModi #ArvindKejriwal
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்களை தொகுத்து எழுதப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழா, டெல்லியில் நடைபெற்றது. அதில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
இன்றைய தினம் மோடி அரசை யார் கேள்வி கேட்டாலும், ‘தேச விரோதி’ என்று முத்திரை குத்துகிறார்கள். டெல்லி அருகே குர்கானில் ஒரு முஸ்லிம் குடும்பம் தாக்கப்பட்டுள்ளது. எந்த காரணமும் இல்லாமல், சிறுபான்மையினர் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மோடி அரசு, ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் கொள்கையை பின்பற்றுகிறது.
இந்த தேர்தலில், என்ன விலை கொடுத்தாவது மோடி அரசை மீண்டும் வரவிடாமல் தடுப்பதே ஒவ்வொரு தேச பக்தரின் நோக்கமாக இருக்க வேண்டும். மோடியை நிச்சயம் தோற்கடிக்க வேண்டும்.
ஒருவேளை, மோடி மீண்டும் பிரதமரானால், அதன்பிறகு தேர்தலே நடத்தப்படாது. மோடியே நிரந்தர பிரதமராக எப்போதும் இருப்பார்.
அந்த அளவுக்கு ஜனநாயகமே முடிவுக்கு வந்து விடும்.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். #PMModi #ArvindKejriwal
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X