search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கடற்படை தளபதியாக கரம்பிர் சிங் நியமனம்
    X

    இந்திய கடற்படை தளபதியாக கரம்பிர் சிங் நியமனம்

    இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா பதவிக்காலம் விரைவில் முடியவுள்ள நிலையில் புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். #KarambirSingh #IndianNavy #SunilLanba
    புதுடெல்லி:

    உலகில் சிறப்பு வாய்ந்த கடற்படைகளில் இடம்பெற்றுள்ள இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா-வின் பதவிக்காலம் 31-5-2019 அன்று முடிவடைகிறது.

    இந்நிலையில் புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கடற்படையின் கிழக்குப்பகுதி தளபதியாக பொறுப்புவகிக்கும் கரம்பிர் சிங் முன்னர் ஐ.எம்.எஸ்.டெல்லி, ஐ.எம்.எஸ்.ரானா கடற்படை தளங்களின் தளபதியாகவும் பதவி வகித்துள்ளார்.

    சுனில் லான்பாவுடன் கரம்பிர் சிங் (கோப்புப் படம்)

    38 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் பணியாற்றிவரும் கரம்பிர் சிங், அதி விஷிட் சேவா, பரம் விஷிட் சேவா உள்ளிட்ட சிறப்புக்குரிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #KarambirSingh #IndianNavy #SunilLanba
    Next Story
    ×