search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் - எடியூரப்பா ஆவேசம்
    X

    போலி ஆவணங்களை வைத்து காங்கிரஸ் அவதூறு பிரசாரம் - எடியூரப்பா ஆவேசம்

    வருமான வரித்துறை போலி ஆவணங்கள் என்று நிராகரித்த குறிப்புகளை வைத்து தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் அவதூறு பிரசாரம் செய்ய தொடங்கி விட்டதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். #LSpolls #electionmileage #Yeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா ஆட்சிக்காலத்தில் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு ரூ.1800 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாக வெளியான தகவலை லோக்பால் விசாரிக்க வேண்டும் என்று டெல்லியில் இன்று பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தினார்.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பதிலளித்த எடியூரப்பா, வருமான வரித்துறை போலி ஆவணங்கள் என்று நிராகரித்த குறிப்புகளை வைத்து தேர்தல் நேரத்தில்  காங்கிரஸ் அவதூறு பிரசாரம் செய்ய தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.



    'ஊழல் எண்ணங்களில் மூழ்கிப்போய் கிடக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மோடியின் செல்வாக்கை கண்டு அச்சத்தில் உறந்துப்போய் கிடக்கின்றனர். அவரது செல்வாக்கை எதிர்த்து வெற்றிபெற முடியாதவர்கள் தேர்தலுக்காக இப்படிப்பட்ட அவதூறான குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர்.

    காங்கிரஸ் தெரிவித்துள்ள கருத்துகள் எல்லாம் தவறானவை, ஆதாரமற்றவை. இதை வெளியிட்ட நபர் மீது அவதூறு வழக்கு தொடர்வதற்காக வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்’ எனவும் எடியூரப்பா தெரிவித்தார். #LSpolls #electionmileage #Yeddyurappa
    Next Story
    ×