search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் - லோக்பால் விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
    X

    பாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1800 கோடி லஞ்சம் - லோக்பால் விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

    கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா ஆட்சிக்காலத்தில் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு ரூ.1800 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாக வெளியான தகவலை லோக்பால் விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. #Congressseeksprobe #Rs1800crorepayoffs #BJPleaderss1800crore
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா இல்லத்தில் வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரியில் காணப்பட்ட விபரம் என்று எடியூரப்பாவின் கையொப்பத்துடன் பிரபல ஆங்கில பத்திரிகை ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து வருமான வரித்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ள இந்த டைரியின் சில பக்கங்களின் நகல்களில் எடியூரப்பா லஞ்சமாக சம்பாதித்த பணத்தில் இருந்து சுமார் 1800 கோடி ரூபாய் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களுக்கு அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



    இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ’கடந்த 2017-ம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட இந்த டைரியில் காணப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் இதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின்மீது மோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பினார்.  லஞ்சப்பணம் பங்குபோடும் விவகாரம் தொடர்பாக சில தலைவர்கள் எடியூரப்பாவுடன் நடத்திய உரையாடல்களையும் அவர் படித்துக் காட்டினார்.

    இந்த லஞ்சப்பணத்தை பாஜக தலைவர்கள் வாங்கினார்களா?, இல்லையா? என்பதை பிரதமர் மோடி உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும். இந்த ஆதாரத்தில் தகுந்த முகாந்திரம் இருப்பதால் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் அனைவரிடமும் புதிதாக நியமிக்கப்பட்ட லோக்பால் நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார். #Congressseeksprobe #Rs1800crorepayoffs #BJPleaderss1800crore
    Next Story
    ×