என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல் நாளை பீகாரில் பிரசாரம்
Byமாலை மலர்22 March 2019 6:38 AM GMT (Updated: 22 March 2019 6:38 AM GMT)
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி நாளை பீகாரில் பிரசாரம் மேற்கொள்கிறார். #LSPolls #Congress #RahulGandhi
பாட்னா:
பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இந்த கூட்டணியில் கடும் இழுபறிக்கு பிறகு உடன்பாடு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரசுக்கு 9 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
நாளை அவர் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். பீகாரில் வங்காளதேச எல்லையையொட்டி சீமாஞ்சல் என்ற பகுதி உள்ளது. அங்கு 4 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் ஏப்ரல் 18-ந்தேதியும், 23-ந்தேதியும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இங்குள்ள புளுனியாவில் ராகுல்காந்தி நாளை பிரசாரம் செய்கிறார். இந்த பகுதியில் சிறுபான்மை மக்கள் 70 சதவீதம் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் கூட்டணியில் ஆதரவாளர்கள். அவர்கள் ஓட்டுகளை அள்ளும் வகையில் ராகுல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
ராகுல்காந்தி பீகாரில் மேலும் பல கட்ட தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கிறார். #LSPolls #Congress #RahulGandhi
பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இந்த கூட்டணியில் கடும் இழுபறிக்கு பிறகு உடன்பாடு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரசுக்கு 9 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
நாளை அவர் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். பீகாரில் வங்காளதேச எல்லையையொட்டி சீமாஞ்சல் என்ற பகுதி உள்ளது. அங்கு 4 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் ஏப்ரல் 18-ந்தேதியும், 23-ந்தேதியும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இங்குள்ள புளுனியாவில் ராகுல்காந்தி நாளை பிரசாரம் செய்கிறார். இந்த பகுதியில் சிறுபான்மை மக்கள் 70 சதவீதம் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் கூட்டணியில் ஆதரவாளர்கள். அவர்கள் ஓட்டுகளை அள்ளும் வகையில் ராகுல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
ராகுல்காந்தி பீகாரில் மேலும் பல கட்ட தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கிறார். #LSPolls #Congress #RahulGandhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X