search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா முன்கூட்டியே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் - வாக்காளர்கள் கருத்து
    X

    பிரியங்கா முன்கூட்டியே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் - வாக்காளர்கள் கருத்து

    பிரியங்கா முன்கூட்டியே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்று வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #priyanka #rahulgandhi #parliamentelection

    லக்னோ:

    நாட்டில் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்த நிலையில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.

    2009 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் இந்த மாநிலத்தில் தனியாக நின்று ஓரளவு கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதேபோல இந்த தேர்தலிலும் கைப்பற்ற முடியும் என்று கருதுகிறது.

    இதற்காக பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்து உத்தரபிரதேசத்தில் பாதி பகுதியில் தேர்தல் பொறுப்பாளராக அவரை நியமித்து உள்ளனர்.

    பிரியங்காவின் வருகை உத்தரபுபிரதேச அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் இங்கு பல தொகுதியில் வெற்றி பெறும் என்று அரசியல் நிபுணர்கள் சொல்கின்றனர்.

    இதுபற்றி தொகுதி வாக்காளர்கள் சிலரை சந்தித்து கருத்து கேட்கப்பட்டது.

    தக்காளி வியாபாரி சுந்தர் லால் என்பவர் கூறும்போது, “பிரியங்காவிடம் என்ன எதிர்பார்ப்பது என்று தெரியவில்லை. அவர் இந்திரா காந்தியின் பேத்தி. ஆனால் அவர் இந்திராகாந்தி அல்ல. மன்மோகன்சிங் ஆட்சியை 10 ஆண்டுகள் பார்த்தோம். ஆனால் எதுவும் செய்யவில்லை.


    பிரியங்காவோ, ராகுலோ பெரிதாக செய்ய வருகிறார்கள் என்று எதிர்பார்க்கவிலை. நான் வலுவான தேசம் அமைய ஓட்டு போடுவேன்” என்றார்.

    மற்றொரு வியாபாரி ராஜேந்திர யாதவிடம் கேட்டபோது, அகிலேஷ் யாதவுக்குதான் எனது ஓட்டு என்று கூறினார்.

    சுக்லா கஞ்சை சேர்ந்த ராஜுமிஸ்ரா என்பவர் கூறும்போது, “இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக உள்ள அன்னுதான்டன் சிறப்பாக செயல்படக் கூடியவர். அவருக்கு ஓட்டு போடுவேன்” என்றார்.

    முதல்முறை வாக்காளரான அனுகிருத்திசிங் கூறும்போது, “பிரியங்காவின் வசீகரம் என்னை ஈர்த்துள்ளது. ஆனாலும் போதிய நம்பிக்கை ஏற்படவில்லை” என்று கூறினார்.

    சவுத் அகமது என்பவர் கூறும்போது, “பிரியங்கா அரசியல் களம் இறங்கி இருப்பது சிறப்பானது. ஆனாலும் காலதாமதமாக அவர் வந்து இருக்கிறார். முன்கூட்டியே அவர் இறங்கி இருந்தால் நன்றாக அமைந்திருக்கும்” என்றார்.

    கான்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சொனகர் அக்தர் கூறும்போது, “பிரியங்கா வருகை கட்சியில் திருப்பு முனையை ஏற்படுத்தும். தேர்தல் முடிவில் இங்கு காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றியை கண்டு அனைவரும் ஆச்சரியப்படப் போகிறார்கள்” என்றார். #priyanka #rahulgandhi #parliamentelection

    Next Story
    ×