search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. சுடப்பட்டார்
    X

    உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. சுடப்பட்டார்

    உத்தரபிரதேசத்தில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ. யோகேஷ் வர்மா காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். #BJPMLA #YogeshVerma
    லக்கிம்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. யோகேஷ் வர்மா. இவர், லக்கிம்பூரில் நேற்று தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது, மர்ம நபர் ஒருவர், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினார். இதில், எம்.எல்.ஏ.வின் காலில் குண்டு பாய்ந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 
    Next Story
    ×