search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலும் 5 பிரேதங்கள் மீட்பு - கர்நாடகாவில் கட்டிடம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு
    X

    மேலும் 5 பிரேதங்கள் மீட்பு - கர்நாடகாவில் கட்டிடம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு

    கர்நாடகா மாநிலத்தின் தார்வாட் பகுதியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை இன்று 10 ஆக அதிகரித்துள்ளது. #DharwadBulidingCollapse
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள குமரேஷ்வர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.

    கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 4 மாடி கட்டிடம் கடந்த 19-ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர்.
     
    தகவலறிந்து அங்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதற்கிடையே, கட்டிட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் என்றும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் அன்றிரவு முதல்கட்ட தகவல் வெளியானது.

    நேற்று நடைபெற்ற மீட்பு பணிகளின் போது 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

    தொடர்ந்து நடைபெற்றுவரும் மீட்பு பணியில் மேலும் 5 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை இன்று பத்தாக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் 12 முதல் 15 பேர் இன்னும் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். #DharwadBulidingCollapse
    Next Story
    ×