search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட தடை: ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்.சுக்கு எதிரான வழக்கு 25-ந்தேதி விசாரணை
    X

    வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட தடை: ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்.சுக்கு எதிரான வழக்கு 25-ந்தேதி விசாரணை

    ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட தடை கோரிய வழக்கை 25-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்துள்ளது. #ADMK #DelhiCourt

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அந்த கட்சி இரண்டு பிரிவாக செயல்பட்டது.

    முதல்-அமைச்சர் இ.பி.எஸ், துணை முதல்- அமைச்சர் ஓ.பி.எஸ். ஆகியோர் ஓர் அணியாகவும், சசிகலா, தினகரன் மற்றொரு அணியாகவும் செயல்பட்டனர்.

    கடந்த 2017-ல் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள், வழிகாட்டுதல் குழு என புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

    ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொதுக்குழுவில் நியமிக்கப்பட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேட்பாளர்கள் வேட்புமனுவில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கையெழுத்திட தடை விதிக்க கோரியும் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில் ‘‘அ.தி.மு. க.வின் விதிகளின்படி வேட்பாளர்களின் மனுவில் கையெழுத்திட பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு மார்ச் 28-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. ஆனால் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தொடங்குவதால் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கே.சி.பழனிசாமி தரப்பில் முறையிடப்பட்டது.

    இந்த கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை இன்று அவசர வழக்காக விசாரிப்பதாக டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்து இருந்தது.

    இந்தநிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வருகிற 25-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்தது. #ADMK #DelhiCourt

    Next Story
    ×