search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை - பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு
    X

    சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை - பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு

    சத்தீஸ்கரில் இன்று நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார். #CRPFjawan #Chhattisgarhblast
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், தன்ட்டேவாடா மாவட்டத்துக்குட்பட்ட அரன்பூர் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, மத்திய ரிசர்வ் படை போலீசாருடன் விரைந்து சென்ற கூட்டப்படையினர் அந்த இடத்தை இன்று மாலை முற்றுகையிட்டனர்.

    அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 6 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு வீரர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். #CRPFjawan #Chhattisgarhblast
    Next Story
    ×