search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்காவின் வருகை பா.ஜனதாவை பாதிக்காது - உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் பேட்டி
    X

    பிரியங்காவின் வருகை பா.ஜனதாவை பாதிக்காது - உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் பேட்டி

    பிரியங்காவின் வருகை பா.ஜனதாவை பாதிக் காது என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் கூறினார். #YogiAdityanath #BJP #Priyanka
    லக்னோ:

    காங்கிரஸ் கட்சி பிரியங்காவை இந்த முறை பொதுச்செயலாளராகவும், கிழக்கு உத்தரபிரதேச பொறுப்பாளராகவும் நியமித்துள்ளது. அவரது சேவையை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பான இது ஒரு உட்கட்சி பிரச்சினை. காங்கிரஸ் கட்சிக்காக அவர் இதற்கு முன்னரும் பிரசாரம் செய்திருக்கிறார், இந்த முறையும் பிரசாரம் செய்கிறார். அவரது வருகை தேர்தலில் பா.ஜனதாவை எந்தவகையிலும் பாதிக்காது.

    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி ஏற்கனவே ஒரு பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. குறிப்பிட்ட தொகுதிகளுக்காக இரண்டு கட்சிகளும் போட்டிபோடுகிறது. இந்த கூட்டணி முயற்சி தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு ‘பொய் அலாரம்’ தவிர வேறு ஒன்றுமில்லை.

    நாடு யாருடைய கைகளில் இருந்தால் பாதுகாப்பாகவும், வளமாகவும் இருக்குமோ அவருக்கே, அந்த கட்சிக்கே மக்கள் ஓட்டு போடுவார்கள். பாகிஸ்தான் பாலகோட் தாக்குதலுக்கு பின்னர் பிரதமர் மோடியின் வலிமையான தலைமையின் கீழ் இந்தியா உலகில் சக்திமிக்க நாடாக உருவாகியுள்ளது.

    ராமர் பற்றி ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும். அவரை தங்கள் முன்மாதிரியாகவும் கருதுகிறார்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியும், பாதுகாப்பும் தேவை. முன்பு எதிர்க்கட்சிகளால் சாத்தியம் இல்லாதது, இப்போது மோடியின் தலைமையில் பா.ஜனதாவால் சாத்தியமாகி உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 74 இடங்களில் பா.ஜனதா வெற்றிபெறும்.
    Next Story
    ×