search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்திலும் ராகுல்காந்தி போட்டியிட தலைவர்கள் வலியுறுத்தல்
    X

    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்திலும் ராகுல்காந்தி போட்டியிட தலைவர்கள் வலியுறுத்தல்

    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். #Congress
    ஓசூர்:

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, உத்திரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், அவர் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் போட்டியிட வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    கர்நாடக மாநிலம் சாமராஜ் நகரில் நேற்று அக்கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டுராவ், கூறியதாவது:-

    ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வோம்.

    ஏற்கனவே, அவரது பாட்டி இந்திரா காந்தி, தாயார் சோனியா காந்தி ஆகியோரை கர்நாடக மக்கள் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளனர். அந்த வரிசையில், ராகுல் காந்தியும் கர்நாடகாவில் போட்டியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    அவரது இந்த விருப்பத்தை முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா, தற்போதைய துணை முதல் மந்திரி பரமேஷ்வர் ஆகியோரும் வரவேற்று முன்மொழிந்துள்ளனர்.

    மேலும், காங்கிரஸ் கட்சிக்கு பாதுகாப்பான தொகுதி என்று கருதப்படும் மைசூருவிலிருந்து ராகுலை போட்டியிட செய்வது என்று தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அத்துடன் பீதர், தாவணகெரே ஆகிய தொகுதிகளும் ராகுல் காந்திக்காக, கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் பரிசீலனை செய்து வருகின்றனர். #Congress
    Next Story
    ×