search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் ரூ.332 கோடி போதைப்பொருட்கள் கடத்தல்- 10 பேர் கைது
    X

    டெல்லியில் ரூ.332 கோடி போதைப்பொருட்கள் கடத்தல்- 10 பேர் கைது

    டெல்லியில் ரூ.332 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருட்கள் கடத்திய 10 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். #Delhismugling
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் நாடுமுழுவதும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் டெல்லியில் இன்று நடத்தப்பட்ட திடீர் சோதனையில், போதை மருந்து கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர்.  

    இந்த சோதனையில் அவர்கள் ஹெராயின் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.  இதையடுத்து  83 கிலோ கிராம் எடைக் கொண்ட ஹெராயின் போதை மருந்தை போலீசார் கைப்பற்றினர். சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு  ரூ.332 கோடி ஆகும்.

    போதைப்பொருட்களை வைத்திருந்த 10 பேரை போலீசார்  கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Delhismugling
    Next Story
    ×