search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேபரேலி தொகுதியில் 5-வது முறையாக களமிறங்கும் சோனியா
    X

    ரேபரேலி தொகுதியில் 5-வது முறையாக களமிறங்கும் சோனியா

    ரேபரேலியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 5-வது முறையாக களமிறங்க உள்ளார். #SoniaGanthi #LokSabha #RaeBareli
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது. இங்கு 1971-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட தேர்தல்களில் 1977-ல் இந்திரா காந்தி தோல்வியடைந்ததை தவிர, பிற தேர்தல்கள் அனைத்திலும் அந்தக்கட்சி வெற்றிக்கனியை பறித்து இருக்கிறது.

    இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ரேபரேலியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கடந்த 2004-ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வருகிறார். 2006-ல் நடந்த இடைத்தேர்தல் உள்ளிட்ட 4 தேர்தல்களில் அந்த தொகுதியில் போட்டியிட்டு அவர் வென்றிருந்தார். 2004-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று இருந்தார்.இதைத்தொடர்ந்து வருகிற தேர்தலுக்கும் ரேபரேலி தொகுதி சோனியாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இந்த தகவல் இடம்பெற்று இருந்தது. இதன் மூலம் 5-வது முறையாக ரேபரேலி தொகுதியில் அவர் களமிறங்க உள்ளார்.முன்னதாக சோனியாவின் உடல்நலக்குறைவு காரணமாக அவர் போட்டியிடுவது குறித்து சந்தேகங்கள் கிளம்பி இருந்த நிலையில், அவர் போட்டியிடுவதை கட்சித்தலைமை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  SoniaGanthi #LokSabha #RaeBareli
    Next Story
    ×