search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - இந்திய ராணுவம் தகுந்த பதிலடி
    X

    ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - இந்திய ராணுவம் தகுந்த பதிலடி

    ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை அத்துமீறி தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. #PakistanCeasefireViolation #JammuAndKashmir
    ஸ்ரீநகர்:

    புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாத முகாமை தகர்த்ததால் பாகிஸ்தான் கடும் ஆத்திரமடைந்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான்  ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. 

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் எல்லைக்கட்டுப்பாடு கோட்டு பகுதியில் உள்ள ரஜோரியின் சுந்தர்பானியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை 6 மணியளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. துப்பாக்கியால் சுட்டும், சிறிய கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. #PakistanCeasefireViolation #JammuAndKashmir
    Next Story
    ×