என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத் பொதுக்கூட்டத்தில் கொச்சிக்கு பதில் கராச்சி என கூறிய மோடி
Byமாலை மலர்4 March 2019 6:43 PM GMT (Updated: 4 March 2019 6:43 PM GMT)
கொல்கத்தாவில் இருந்தாலும் சரி, கராச்சியில் இருந்தாலும் சரி, ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை வைத்திருப்பவர்கள் இலவச சிகிச்சை பெற முடியும் என குஜராத் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். #PMModi #Kochi #Karachi
ஜாம்நகர்:
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள குரு கோவிந்த் சிங் ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.
பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், “ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டையை வைத்திருப்பவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை பெற முடியும். ஜாம்நகர் மக்களான நீங்கள் மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு செல்லும் போது உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டால் மீண்டும் ஜாம்நகருக்கு வரவேண்டியது இல்லை. போபாலில் உள்ள ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற முடியும். கொல்கத்தாவில் இருந்தாலும் சரி, கராச்சியில் இருந்தாலும் சரி, ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை வைத்திருப்பவர்கள் இலவச சிகிச்சை பெற முடியும்” என்றார்.
இதை கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட மோடி, “நான் கராச்சியை குறிப்பிடவில்லை. கேரள மாநிலம் கொச்சியை தான் குறிப்பிட்டேன்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “என் சிந்தனை எல்லாம் தற்போது அண்டை நாடு குறித்த விஷயத்தில் தான் உள்ளது. அதனால் தான் கராச்சி என கூறிவிட்டேன். நம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நாம் திருப்பி தாக்குதல் நடத்த வேண்டுமா? வேண்டாமா?” என கேட்டார். அப்போது அங்கிருந்த மக்கள், “தாக்குதல் நடத்த வேண்டும்” என கரகோஷம் எழுப்பினர்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள குரு கோவிந்த் சிங் ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.
பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், “ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டையை வைத்திருப்பவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை பெற முடியும். ஜாம்நகர் மக்களான நீங்கள் மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு செல்லும் போது உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டால் மீண்டும் ஜாம்நகருக்கு வரவேண்டியது இல்லை. போபாலில் உள்ள ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற முடியும். கொல்கத்தாவில் இருந்தாலும் சரி, கராச்சியில் இருந்தாலும் சரி, ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை வைத்திருப்பவர்கள் இலவச சிகிச்சை பெற முடியும்” என்றார்.
இதை கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட மோடி, “நான் கராச்சியை குறிப்பிடவில்லை. கேரள மாநிலம் கொச்சியை தான் குறிப்பிட்டேன்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “என் சிந்தனை எல்லாம் தற்போது அண்டை நாடு குறித்த விஷயத்தில் தான் உள்ளது. அதனால் தான் கராச்சி என கூறிவிட்டேன். நம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நாம் திருப்பி தாக்குதல் நடத்த வேண்டுமா? வேண்டாமா?” என கேட்டார். அப்போது அங்கிருந்த மக்கள், “தாக்குதல் நடத்த வேண்டும்” என கரகோஷம் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X