search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலுக்கு பெயர் சூட்டினால் ரூ.50 ஆயிரம் பரிசு- அதிவேக ரெயில்வே வாரியம் அறிவிப்பு
    X

    ரெயிலுக்கு பெயர் சூட்டினால் ரூ.50 ஆயிரம் பரிசு- அதிவேக ரெயில்வே வாரியம் அறிவிப்பு

    ஆமதாபாத்-மும்பை இடையே விடப்படும் புல்லட் ரெயிலுக்கு பெயர் சூட்டினால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அதிவேக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. #BulletTrain
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் அதிவேக புல்லட் ரெயில் விடப்படும் என்று அறிவித்தார்.

    இதையடுத்து எந்தெந்த வழித்தடங்களில் புல்லட் ரெயில்களை இயக்கலாம் என்று ஆய்வு பணிகள் நடந்தன. அதில் 10 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

    முதல் கட்டமாக மும்பையில் இருந்து ஆமதாபாத்துக்கு புல்லட் ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.

    2022-ம் ஆண்டு முதல் இந்த வழித்தடத்தில் புல்லட் ரெயில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த புல்லட் ரெயில் திட்டத்துக்கு சின்னம் வடிவமைக்கவும், பெயர் சூட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.



    இதற்கு முன்பு ஏர்இந்தியா நிறுவனம் சின்னத்தை தேர்வு செய்யும்போது பொது மக்களிடம் பரிசு போட்டி நடத்தி சின்னத்தை தேர்வு செய்தது. அதுபோல இந்த புல்லட் ரெயிலுக்கும் சின்னத்தையும், பெயரையும் பொதுமக்களுக்கு போட்டி வைத்து தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த திட்டத்தை செயல்படுத்தும் தேசிய அதிவேக ரெயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

    பொதுமக்கள் www.mygov.in என்ற இணையதளம் மூலம் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். அடுத்த மாதம் (மார்ச்) 25-ந்தேதி புல்லட் ரெயிலுக்கான பெயரை அனுப்புவதற்கு கடைசி தேதியாகும்.

    சிறப்பான சின்னம் மற்றும் பெயர் சூட்டுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும். சிறப்பான சின்னத்துக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். 5 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

    அதுபோல புல்லட் ரெயிலுக்கு பொருத்தமான பெயர் சூட்டுபவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

    போட்டி தேர்வுக்குழு இந்த பரிசுக்குரியவர்களை தேர்வு செய்து அறிவிக்கும். #BulletTrain
    Next Story
    ×