என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டிய காவலர்
Byமாலை மலர்21 Feb 2019 7:22 AM GMT (Updated: 21 Feb 2019 7:22 AM GMT)
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டி வருகின்றார். #PulwamaAttack #ConstableCollectingFund
ராம்பூர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து நாட்டின் மக்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.17 லட்சம் நிதி திரட்டி வழங்கியது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஃபெரோஸ் கான், இறந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டுவதற்காக, தனி ஆளாக ராம்பூர் பகுதியில் 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து ஃபெரோஸ் கூறுகையில், ‘பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய விரும்பினேன். இதற்காக 3 நாள் அனுமதி கேட்டு, அவர்களுக்காக நிதி திரட்டி வருகிறேன். என்னால் முடிந்தது இதுதான். எனக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்’ என்றார். #PulwamaAttack #ConstableCollectingFund
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து நாட்டின் மக்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.17 லட்சம் நிதி திரட்டி வழங்கியது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஃபெரோஸ் கான், இறந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டுவதற்காக, தனி ஆளாக ராம்பூர் பகுதியில் 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து ஃபெரோஸ் கூறுகையில், ‘பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய விரும்பினேன். இதற்காக 3 நாள் அனுமதி கேட்டு, அவர்களுக்காக நிதி திரட்டி வருகிறேன். என்னால் முடிந்தது இதுதான். எனக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்’ என்றார். #PulwamaAttack #ConstableCollectingFund
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X