search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
    X

    ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

    ஜி.எஸ்.டி. துணை கமிட்டி கூட்டம் 23-ந் தேதியும், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 24-ந் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. #GSTCouncilMeeting
    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 33-வது கூட்டம் நேற்று நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் தொடங்கியது. காணொலிகாட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் கேரளா, டெல்லி, பஞ்சாப் உள்பட 6 மாநில நிதி மந்திரிகள் ரியல் எஸ்டேட், லாட்டரி சீட்டு போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அருண்ஜெட்லியிடம் கூறினார்கள். இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. துணை கமிட்டி கூட்டம் 23-ந் தேதியும், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 24-ந் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அருண்ஜெட்லியும், ‘இன்றைய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்ட விவாதம் இன்னும் நிறைவுபெறவில்லை’ என்று தெரிவித்தார். ஜனவரி மாத ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் தேதியும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டு, நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும் என்றும், காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் இந்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×