என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிவி பார்ப்பதில் தகராறு - ஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தான் கைதி கொலை
Byமாலை மலர்20 Feb 2019 10:44 AM GMT (Updated: 21 Feb 2019 10:18 AM GMT)
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் மத்திய சிறையில் நடந்த மோதலில் பாகிஸ்தானை சேர்ந்த கைதி அடித்துக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Pakistanikilled #Jaipurjail
ஜெய்ப்பூர்:
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியை சேர்ந்தவர் ஷக்ருல்லா என்கிற முகமது ஹனிப்.
இந்தியாவில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி அவர் கைதானார். சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெய்ப்பூர் கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
பாகிஸ்தான் கைதி ஷக்ருல்லா ஜெய்ப்பூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். டி.வி.யில் படம் பார்த்துக் கொண்டு இருக்கும்போது நேற்று கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
டி.வி.யின் சத்தத்தை குறைக்குமாறு ஷக்ருல்லா கேட்டார். இது தொடர்பாக அவருக்கும், 4 கைதிகளுக்கும் இடையே மோதல் உருவானது. 4 பேரும் சேர்ந்து பாகிஸ்தான் கைதியை அடித்துக் கொன்றனர்.
சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் வந்து கைதிகளிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அஜித்சிங், குல்விந்தாசிங் உள்ளிட்ட 4 கைதிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. #Pakistanikilled #Jaipurjail
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியை சேர்ந்தவர் ஷக்ருல்லா என்கிற முகமது ஹனிப்.
இந்தியாவில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி அவர் கைதானார். சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெய்ப்பூர் கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
பாகிஸ்தான் கைதி ஷக்ருல்லா ஜெய்ப்பூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். டி.வி.யில் படம் பார்த்துக் கொண்டு இருக்கும்போது நேற்று கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
டி.வி.யின் சத்தத்தை குறைக்குமாறு ஷக்ருல்லா கேட்டார். இது தொடர்பாக அவருக்கும், 4 கைதிகளுக்கும் இடையே மோதல் உருவானது. 4 பேரும் சேர்ந்து பாகிஸ்தான் கைதியை அடித்துக் கொன்றனர்.
சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் வந்து கைதிகளிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அஜித்சிங், குல்விந்தாசிங் உள்ளிட்ட 4 கைதிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. #Pakistanikilled #Jaipurjail
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X