search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புல்வாமா தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது - நிர்மலா சீதாராமன்
    X

    புல்வாமா தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது - நிர்மலா சீதாராமன்

    40 வீரர்களின் உயிரை பறித்த புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா தரப்போகும் பதிலடியை விவரிக்க வார்த்தைகள் போதாது என பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். #DRDO #Pulwamaattack #NirmalaSitharaman
    பெங்களூரு:

    பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவ மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி (டி.ஆர்.டி.ஓ.) மையத்தில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலையை பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

    புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு இருக்கும் தொடர்பு பற்றிய ஆதாரங்களை எங்களுக்கு அளித்தால் நடவடிக்கை எடுக்க தயார் என்று தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாரமன் பதிலளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மத்தியில் வேறு கட்சியின் ஆட்சி நடைபெற்றபோது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பைக்குள் நுழைந்து நடத்திய தொடர் தாக்குதல் தொடர்பான அத்தனை ஆதாரங்களையும் இந்தியா பாகிஸ்தானிடம் அளித்திருந்தது.

    மும்பை தொடர் தாக்குதல் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை நமது நாட்டில் முடிவடைந்து, தீர்ப்பு வெளியாகி, குற்றவாளிகளுக்கு தண்டனையும் விதித்தாகி விட்டது. ஆனால், பாகிஸ்தானிடம் நாம் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்நாட்டு நீதிமன்றத்தில் இன்னும் எதுவுமே நடக்கவில்லை. எனவே, புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு நாம் எதையுமே அளிக்கப் போவதில்லை.



    புல்வாமா சம்பவம் போல் எதிர்காலத்தில் ஏதும் நேராதபடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த தாக்குதலால் நமது வீரர்களின் தார்மீக உணர்வில் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டு விடவில்லை. தங்களது கடமையை சரிவர நிறைவேற்ற அவர்கள் தயார்நிலையில் காத்திருக்கின்றனர். நமது நாட்டு மக்களின் ஆதரவு அவர்களுக்குள் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புல்வாமா தாக்குதலுக்கு உரிய நேரத்தில் தகுந்த பதிலடியை தரும் சுதந்திரம் நமது நாட்டுப் படைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, நமது அரசு இதற்கு எந்த வகையில் பதிலடி தரப்போகிறது என்பது தொடர்பாக நான் எதுவும் கூறப்போவதில்லை. நமது நாட்டு மக்களின் கொந்தளிப்பு, ஆவேசம் மற்றும் வேதனைகளை விவரித்து சொல்ல வார்த்தைகள் போதாது என்பதைப்போல் புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா தரப்போகும் பதிலடியையும் விவரிக்க வார்த்தைகள் போதாது.

    இவ்வாறு அவர் கூறினார். #DRDO #Pulwamaattack #NirmalaSitharaman
    Next Story
    ×