search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புல்வாமாவில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்காக நிதி திரட்டும் சல்மான் கான்
    X

    புல்வாமாவில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்காக நிதி திரட்டும் சல்மான் கான்

    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் குடும்பங்களுக்காக தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் நடிகர் சல்மான் கான் நிதி திரட்டி வருகிறார். #SalmanKhan #BeingHuman #Pulwamamartyrs #PulwamaAttack
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசுகளும் தனிநபர்களும் பெருமளவில் நிதியுதவி செய்து வருகின்றனர். இந்தி நடிகர் அமிதாப் பச்சன் 40 வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அளிப்பதாக அறிவித்தார்.



    இந்த வரிசையில் இந்தி திரையுலகின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக உள்ள சல்மான் கானும் தற்போது இணைந்துள்ளார்.

    தனது ‘பீயிங் ஹியூமன்’ (Being Human) அறக்கட்டளை மூலம் நடிகர் சல்மான் கான் நிதி திரட்டி வருகிறார். சல்மான் கானின் இந்த முயற்சிக்கு மத்திய உள்துறை இணைமந்திரி கிரண் ரிஜுஜு பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார். #SalmanKhan #BeingHuman #Pulwamamartyrs #PulwamaAttack
    Next Story
    ×