search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவாவில் புர்கா அணிந்து பெண்கள் கழிப்பறைக்கு சென்று வந்தவர் கைது
    X

    கோவாவில் புர்கா அணிந்து பெண்கள் கழிப்பறைக்கு சென்று வந்தவர் கைது

    கோவா தலைநகர் பனாஜியில் உள்ள பெண்கள் கழிப்பறைக்குள் கோவாவில் புர்கா அணிந்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். #Burqaman #ladiestoilet #BurqamaninGoa
    பனாஜி:

    கோவா தலைநகர் பனாஜி நகரில் அரசு தலைமை பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் ஆண்-பெண்களுக்கான கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், நேற்று முன்தினம் பெண்கள் கழிப்பறைக்குள் சென்றுவிட்டு வெளியே வந்த ஒரு உருவத்தின் நடை, உடை, பாவனையில் சந்தேகப்பட்ட சிலர் அந்நபரை பிடித்து விசாரித்தபோது ‘அவ்வை சண்முகி’ நாடகம் அம்பலமானது.

    சுமார் 35 மதிக்கத்தக்க அந்நபர் புர்காவின் உள்ளே ஜீன்ஸ் பேன்ட் மற்றும் டி-ஷர்ட் அணிந்து தலையில் சவுரி முடியுடன் பெண்கள் கழிப்பறைக்குள் வேண்டுமென்றே நுழைந்தது தெரியவந்தது.

    சம்பவம் அறிந்து அங்குவந்த போலீசார், விர்ஜில் பாஸ்கோ பெர்னான்டஸ் என்னும் அந்நபரை கைது செய்து, முஸ்லிம் பெண்ணைப்போல் ஆள்மாறாட்டம் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Burqaman #ladiestoilet #BurqamaninGoa
    Next Story
    ×