search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எல்ஏக்களை இழுக்க பா.ஜனதா பேரம்- எடியூரப்பா பேசிய 2-வது ஆடியோவை வெளியிட்ட குமாரசாமி
    X

    எம்எல்ஏக்களை இழுக்க பா.ஜனதா பேரம்- எடியூரப்பா பேசிய 2-வது ஆடியோவை வெளியிட்ட குமாரசாமி

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடியூரப்பா பேரம் பேசிய 2-வது ஆடியோவை குமாரசாமி வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #kumaraswamy #bjp #yeddyurappa

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளதாக முதல்-மந்திரி குமாரசாமி புகார் கூறி வருகிறார்.

    இந்த நிலையில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவின் மகன் சரண்கவுடாவுடன் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா பேரம் பேசி பா.ஜனதாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக ஆடியோ வெளியானது. இந்த ஆடியோவை கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கடந்த 8-ந் தேதி வெளியிட்டார்.

    பா.ஜனதாவில் இணைய உள்ள எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று சபாநாயகருடன் பா.ஜனதா பேரம் பேசியதாகவும் தகவல் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் கர்நாடக சட்டசபையிலும் எதிரொலித்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டு உள்ளார்.


    இந்த நிலையில் எடியூரப்பா மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிவனகவுடாநாயக், பிரிதம் கவுடா ஆகியோர் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவின் மகன் சரண்கவுடாவிடம் பேரம் பேசி உள்ள ஆடியோவை குமாரசாமி நேற்று வெளியிட்டார்.

    இதனால் மீண்டும் ஆடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜனதாவின் இமேஜை குலைக்கும் முயற்சியில் அந்த கட்சி தொடர்பான ஆடியோக்களை குமாரசாமி வெளியிட்டு வருவது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #kumaraswamy #bjp #yeddyurappa

    Next Story
    ×