search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாப்பாடு சரியில்லாததால் ஹோட்டல் ஊழியர்களை தாக்கி பொருட்களை அடித்து நொறுக்கிய விருந்தினர்
    X

    சாப்பாடு சரியில்லாததால் ஹோட்டல் ஊழியர்களை தாக்கி பொருட்களை அடித்து நொறுக்கிய விருந்தினர்

    டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், பரிமாறப்பட்ட உணவு சரியில்லாததால் ஊழியர்களை தாக்கி, ஹோட்டலை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #DelhiHotelStaffAssault
    புதுடெல்லி:

    டெல்லியின் ஜனக்பூரி பகுதியில் உள்ள பிக்காடிலி நட்சத்திர ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை அன்று தொழிலதிபர் ஒருவரின் திருமண விழா நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் ஹோட்டலில் உணவு பரிமாறப்பட்டது.

    அந்த ஹோட்டலின் ஊழியர் உணவு பரிமாறியபோது, உணவு சரி இல்லை என ஒருவர் குறை கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, உணவு சாப்பிட்ட விருந்தினர் ஆத்திரமடைந்து ஹோட்டல் ஊழியரைத் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை ஹோட்டலின் மற்றொரு ஊழியர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், ‘ஹோட்டல் ஊழியரை விருந்தினர் ஒருவர் தாக்குகிறார். அவரை மற்றொரு ஊழியர் தடுக்க முயன்றார்.  தடுப்பதையும் மீறி உணவு பரிமாறக்கூடிய தட்டினைக் கொண்டு தலையில் அடிக்கிறார். அத்துடன், அங்கு கூடியிருந்த விருந்தினர் அனைவரும் சற்றும் எதிர்பாராத விதமாக, அந்த ஊழியரை கண்மூடித்தனமாக தாக்குகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.   

    குடிபோதையில் இருந்த விருந்தினர்கள் ஹோட்டலின் சமையலறைக்குள் சென்று பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதாக ஊழியர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரித்து வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை வீடியோவின் மூலம் அடையாளம் காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. #DelhiHotelStaffAssault  

    Next Story
    ×