search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்.டி.ராமராவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் சந்திரபாபு நாயுடு - பிரதமர் மோடி கடும் தாக்கு
    X

    என்.டி.ராமராவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் சந்திரபாபு நாயுடு - பிரதமர் மோடி கடும் தாக்கு

    கட்சியின் தலைவராக வேண்டும் என்ற ஆசையில் மாமானார் என்.டி.ராமராவின் முதுகில் குத்தியவர் சந்திரபாபு நாயுடு என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். #PMModi #ChandrababuNaidu

    குண்டூர்:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திர மாநிலம் குண்டூர் சென்றார். இரண்டு பெட்ரோலியம் மற்றும் வாயு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்.

    அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடுவை கடுமையாக தாக்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-

    என்.டி.ராமராவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்தான் சந்திரபாபுநாயுடு. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக வேண்டும் என்ற ஆசையில் மாமானார் என்.டி.ராமராவின் முதுகில் குத்தியவர்  சந்திரபாபு நாயுடு. என்.டி.ராமராவின் வழியில் ஆட்சி நடத்துவதாக கூறி சந்திரபாபு நாயுடு ஆந்திர மக்களுக்கும் துரோகம் செய்து விட்டார். அவரது எண்ணங்களை குழி தோண்டி புதைத்துவிட்டார்.

     


     

    மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களைத்தான் அவர் காப்பி அடிக்கிறார். ஆந்திர மக்களுக்கு நல்லது செய்வேன் என்று வாக்குறுதி அளித்த அவர் தன்னைத் தானே வளப்படுத்தி கொண்டார்.

    இவ்வாறு மோடி பேசினார். #PMModi #ChandrababuNaidu

    Next Story
    ×