search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திரா - குண்டூர் பாரத் பெட்ரோலியம் கடலோர முனையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
    X

    ஆந்திரா - குண்டூர் பாரத் பெட்ரோலியம் கடலோர முனையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

    ஆந்திர மாநிலத்தின் குண்டூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கடலோர முனையத்துக்கு பிரதார் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். #PMModi #BPCL
    அமராவதி:

    ஆந்திர மாநிலம் குண்டூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் கடலோர முனையம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை குண்டூர் வந்தடைந்தார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அதன்பின்னர், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கடலோர முனையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:



    தேசிய பாரம்பரிய நகர வளர்ச்சி திட்டத்தில் அமராவதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார் சந்திரபாபு நாயுடு. என்.டி.ராமராவ் வகுத்துத் தந்த பாதையில் இருந்து சந்திரபாபு நாயுடு முற்றிலும் விலகி விட்டார் என தெரிவித்துள்ளார். #PMModi #BPCL
    Next Story
    ×