search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளத்தில் துணிகரம் - திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை
    X

    மேற்கு வங்காளத்தில் துணிகரம் - திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #TMCMLAshotdead
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது கிருஷ்ணகஞ்ச் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

    இந்நிலையில், எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ் புல்வாரியில் உள்ள தனது வீட்டின் அருகில் நடந்த சரஸ்வதி பூஜையில் இன்று பங்கேற்றார்.

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சத்யஜித் பிஸ்வாசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #TMCMLAshotdead
    Next Story
    ×