search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியுரிமை மசோதாவால் அசாம் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது - பிரதமர் மோடி வாக்குறுதி
    X

    குடியுரிமை மசோதாவால் அசாம் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது - பிரதமர் மோடி வாக்குறுதி

    பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குடியுரிமை மசோதாவால் அசாம் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது என உறுதி அளித்துள்ளார். #CitizenshipBill #PMModi
    திஸ்பூர்:

    அரசுமுறை பயணமாக அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இன்று வந்த பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் இடாநகர் பகுதியில் உள்ள ஹோல்லோங்கி என்ற இடத்தில் அமையவுள்ள புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, உரையாற்றினார்.

    இதையடுத்து, அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றார். அசாம் மாநிலத்தின் சுகாதார துறை மந்திரி ஹிமாடா பிஸ்வா சர்மாவின் தொகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.



    அப்போது அவர் பேசுகையில், குடியுரிமை மசோதாவால் அசாம் மற்றும் வடகிழக்கு மாநில மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது. மாநில அரசுகளின் பரிந்துரையை ஏற்றபிறகே, இந்த மசோதாவை சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். #CitizenshipBill #PMModi
    Next Story
    ×