search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் 35 நாளில் பன்றிக்காய்ச்சலுக்கு 88 பேர் பலி
    X

    ராஜஸ்தானில் 35 நாளில் பன்றிக்காய்ச்சலுக்கு 88 பேர் பலி

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனவரி 1 முதல் பிப். 5-ம் தேதி வரை பன்றிக்காய்ச்சலால் 88 பேர் உயிரிழந்துள்ளனர். #swineflu #Rajasthanswineflu
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நோயின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து பிப்ரவரி 5-ம் தேதிவரை 2,522 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

    பன்றிக்காய்ச்சலுக்கு இன்றுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர். மிக அதிகமாக ஜோத்பூரில் 28 பேர் இறந்துள்ளனர் என்றும், 11, 811 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 2,522 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது என்றும் என அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #swineflu  #Rajasthanswineflu
    Next Story
    ×