search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இனிமேல் சந்திரபாபு நாயுடுவுக்கு எங்கள் கூட்டணி கதவு ஒருபோதும் திறக்காது - அமித்ஷா
    X

    இனிமேல் சந்திரபாபு நாயுடுவுக்கு எங்கள் கூட்டணி கதவு ஒருபோதும் திறக்காது - அமித்ஷா

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு ஒருபோதும் சந்திரபாபு நாயுடுவுக்கு இனி திறக்காது என அமித்ஷா கூறியுள்ளார். #ChandrababuNaidu #amitshah #bjp #parliamentelection
    அமராவதி:

    தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகிய ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, இப்போது எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் பணியை தீவிரமாக செய்து வருகிறார். ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பா.ஜனதா கூட்டத்தில் பேசிய அமித்ஷா, மத்தியில் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்தபோது சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வந்து இணைந்தார். 2004-ல் காங்கிரஸ் கூட்டணிக்கு சென்றார். பின்னர்  2014-ல் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தார். 

    இப்போது காங்கிரஸை ஆதரிக்கிறார். தெலுங்கானாவில் கூட்டணி அமைத்து தோல்வியை தழுவினார்.  2019-ல் வெற்றிபெற்று நாங்கள் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வருவோம். அப்போது மீண்டும் எங்களுடன் இணைய முயற்சி செய்வார். ஆனால் இனிமேல் அவருக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு திறக்காது என்பதை  உங்களிடம் உறுதியாக சொல்ல விரும்புகிறேன் என்றார். மேலும், பா.ஜனதா ஆந்திர மாநிலத்துக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.  #ChandrababuNaidu #amitshah #bjp #parliamentelection
    Next Story
    ×