search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் - சீதாராம் யெச்சூரி
    X

    பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் - சீதாராம் யெச்சூரி

    மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டு சார்பில் நடைபெற்ற பேரணியில் பேசிய சீதாராம் யெச்சூரி, பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என தெரிவித்தார். #SitaramYechury #PMModi
    கொல்கத்தா:

    மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மற்றும் மேற்கு வங்காளத்தை ஆட்சி செய்யும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் முழுவதிலும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

    கொல்கத்தாவில் நடந்த பேரணியில் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாரம் யெச்சூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:



    வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும். அவர் நாடு முழுவதும் கம்யூனிசத்தை பற்றி தவறாக பிரச்சாரம் செய்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த பாஜக நாட்டை கொள்ளை அடித்துள்ளது. பட்ஜெட்டில் கொடுத்துள்ள பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.

    மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவும், மாநிலத்தில் ஆட்சி செய்யும் திரிணாமுல் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

    எனவே, மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும், மத்தியில் பாஜக ஆட்சியையும் தோற்கடிக்க வேண்டும் என தெரிவித்தார். #SitaramYechury #PMModi
    Next Story
    ×