என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகார் ரெயில் விபத்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்
Byமாலை மலர்3 Feb 2019 6:16 AM GMT (Updated: 3 Feb 2019 6:16 AM GMT)
பீகார் மாநிலத்தில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் பலி 7 ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #Modicondoles #TrainAccident #SeemanchalExpress
புதுடெல்லி:
பீகார் மாநிலம், ஜோக்பனி நகரில் இருந்து டெல்லியின் ஆனந்த் விகார் பகுதியை நோக்கிச் சென்ற சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மெஹ்னார் சாலையை கடந்தபோது, ஹதாய் பஜர்க் பகுதியருகே தடம்புரண்டது.
அந்த ரெயிலின் 11 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி பக்கவாட்டில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக முதலில் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. இன்று காலை 11 மணி நிலவரப்படி இவ்விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 20-க்கும் அதிகமானவர்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்து பற்றிய செய்தியை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ரெயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இன்றைய விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக அளிக்கப்படும் என ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். #PMModi #Modicondoles #TrainAccident #SeemanchalExpress
பீகார் மாநிலம், ஜோக்பனி நகரில் இருந்து டெல்லியின் ஆனந்த் விகார் பகுதியை நோக்கிச் சென்ற சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மெஹ்னார் சாலையை கடந்தபோது, ஹதாய் பஜர்க் பகுதியருகே தடம்புரண்டது.
அந்த ரெயிலின் 11 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி பக்கவாட்டில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக முதலில் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. இன்று காலை 11 மணி நிலவரப்படி இவ்விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 20-க்கும் அதிகமானவர்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ரெயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இன்றைய விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக அளிக்கப்படும் என ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். #PMModi #Modicondoles #TrainAccident #SeemanchalExpress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X