search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திங்கட்கிழமை வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு
    X

    திங்கட்கிழமை வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு

    பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன. #Parliament #Budget2019
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அத்துடன், அவை நடவடிக்கைகள் நிறைவடைந்தன.

    இரண்டாம் நாளான இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியதும், மக்களவையில் நிதி மந்திரி பியூஷ் கோயல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 12.45 மணிக்கு பட்ஜெட்டை வாசித்து முடித்தார். பட்ஜெட் வாசித்து முடிந்ததும் அத்துடன் இன்றைய கூட்டம் நிறைவுபெற்று திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


    மக்களவையில் வாசிக்கப்பட்ட பட்ஜெட்டை, மாநிலங்களவையிலும் நிதி மந்திரி தாக்கல் செய்தார். அதன்பின்னர் அவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். #Parliament #Budget2019
    Next Story
    ×