search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு - பிப்.6ல் விசாரணை
    X

    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு - பிப்.6ல் விசாரணை

    சபரிமலை விவகாரம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது பிப்ரவரி 6ம் தேதி விசாரணை நடைபெறுகிறது. #Sabarimala
    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
     
    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதனைக் கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் கேரள ஐகோர்ட்டிலும் இது தொடர்பாக பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
      
    இந்த மனு பிப்ரவரி 6ம் தேதி விசாரிக்கப்படும் என்றும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் நாரிமன், கான்வில்கர், சந்திரசூட், மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #Sabarimala
    Next Story
    ×