search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய விமானப்படையை மோடி விற்று விட்டார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
    X

    இந்திய விமானப்படையை மோடி விற்று விட்டார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    ரபேல் ஊழல் மூலம் இந்திய விமானப்படையை பிரதமர் மோடி விற்று விட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #ModisoldIAF #RahulGandhi
    புதுடெல்லி:

    நாடு தழுவிய அளவிலான காங்கிரஸ் இளைஞர் அணியினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வீடியோ கான்பிரன்சிங் முறையில் இன்று பங்கேற்று பேசினார்.

    ‘ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தனது நண்பரான அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்ததன் மூலம் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை மோடி திருடி விட்டார். இது இந்த நாட்டு மக்கள் அனைவருக்குமே தெரியும்.

    மோடி அவர்களே! உங்களால் மட்டுமல்ல, ரபேல் விவகாரத்தில் உண்மையை மறைக்க யாராலும் முடியாது. உண்மை எப்படியாவது வெளிப்பட்டே தீரும். உங்களால் இரவில் தூங்க முடியாது. தூங்கும்போது அனில் அம்பானியின் முகமும் ரபேல் போர் விமானத்தின் படமும், இந்திய விமானப்படையில் பணியாற்றி உயிர்நீத்த தியாகிகளின் முகங்களும் உங்கள் கண் முன்னே வந்து நிற்கும்.  

    நீங்கள் இந்திய விமானப்படையையே விற்று விட்டீர்கள். நாட்டில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடி விட்டீர்கள்’ என இந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் குறிப்பிட்டுள்ளார். #ModisoldIAF #RahulGandhi 
    Next Story
    ×