search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் - 28 நாட்களில் 75 பேர் பலி
    X

    ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் - 28 நாட்களில் 75 பேர் பலி

    ராஜஸ்தான் மாநிலத்தில் வேகமாக பரவிவரும் பன்றிக்காய்ச்சலால் ஜனவரி முதல் தேதியில் இருந்து இன்றுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். #swineflu #Rajasthanswineflu
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நோயின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டில் ஜனவரி முதல் தேதியில் இருந்து 28-ம் தேதிவரை 1911 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய்தாக்கம் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளதாகவும், இம்மாதத்தில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #swineflu  #Rajasthanswineflu
    Next Story
    ×