search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி
    X

    டெல்லியில் ஆம்னி வேன், கார் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி

    டெல்லியில் ஒரு ஆம்னி வேன் மற்றும் கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர். #delhicaraccident
    புது டெல்லி:

    டெல்லியில் உள்ள ஷாதரா பகுதிக்குட்பட்ட ஆனந்த் விஹார் பகுதியில் நேற்று இரவு கார் மற்றும் ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக  உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், ‘விபத்தில் கார் மற்றும் ஆம்னி வேன் இரண்டுமே தீப்பிடித்து முழுவதும் எரிந்தது. காரில் இருந்த ஒருவர் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த கர்வ் செகால்(30), ஆம்னிவேனில் இருந்த முஸ்தபாபாத் நகரைச் சேர்ந்த ஷாம்ஷாத் (28) மற்றும் அப்துல்(28) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்’ என தெரிவித்தனர்.

    படுகாயமடைந்தவர்களுள் ஒருவர் சரிதா விஹாரைச் சேர்ந்த அக்‌ஷய் ஜெய்ன் (21), மற்றும் இம்ரான் (28). இவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்  பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் விபத்து குறித்து  சிசிடிவி ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. காரில் வந்தவர்கள் குடித்து விட்டு பயணம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #delhicaraccident

    Next Story
    ×