என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவில் தெலுங்குதேசம் எம்எல்ஏ கட்சியில் இருந்து விலகல்
Byமாலை மலர்23 Jan 2019 11:22 AM GMT (Updated: 23 Jan 2019 11:22 AM GMT)
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ. மல்லிகார்ஜூனா ரெட்டி கட்சியில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். #ChandrababuNaidu #MallikarjunaReddy
விஜயவாடா:
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் அக்கட்சியின் ராஜம்பேட் தொகுதி எம்.எல்.ஏ. மல்லிகார்ஜூனா ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து திடீரென்று விலகி உள்ளார்.
மேலும் அவர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேருவதாக அறிவித்து உள்ளார்.
இதையடுத்து நேற்று ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். பின்னர் மல்லிகார்ஜூனா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
தெலுங்குதேசம் கட்சியில் ஜனநாயகம் இல்லை. பாகுபாடுகள் உள்ளன. அக்கட்சியில் இருப்பது தாங்க முடியாத வலியை தருகிறது.
இதனால் நல்ல தலைமையில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்தேன்.
சந்திரபாபு நாயுடு 23 எம்.எல்.ஏ.க்களை கால்நடை மந்தையில் விலைக்கு வாங்குவதுபோல் வாங்கினார். ஆனால் ஜெகன் மோகன்ரெட்டி என்னிடம் உங்கள் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்து விட்டு கட்சியில் சேருங்கள் என்று கூறினார். இதுதான் இரு கட்சிக்கும், இரு தலைவர்களுக்கும் உள்ள ஜனநாயக வேறுபாடு.
இம்மாத கடைசியில் முறைப்படி எம்.எல்.ஏ. பதவியையும், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டு ஒய்.எஸ்.ஆர். கட்சியில் இணைவேன்.
அமைச்சர் ஆதிநாராயணா ரெட்டியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறுவதில் உண்மை இல்லை. அது வெறும் புரளிதான்.
இளம் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டிக்கு மக்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர் அரசியல் கடைபிடிக்கும் தூய்மை போன்றவற்றால் தான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #ChandrababuNaidu #MallikarjunaReddy
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் அக்கட்சியின் ராஜம்பேட் தொகுதி எம்.எல்.ஏ. மல்லிகார்ஜூனா ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து திடீரென்று விலகி உள்ளார்.
மேலும் அவர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேருவதாக அறிவித்து உள்ளார்.
இதையடுத்து நேற்று ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். பின்னர் மல்லிகார்ஜூனா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
தெலுங்குதேசம் கட்சியில் ஜனநாயகம் இல்லை. பாகுபாடுகள் உள்ளன. அக்கட்சியில் இருப்பது தாங்க முடியாத வலியை தருகிறது.
இதனால் நல்ல தலைமையில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்தேன்.
சந்திரபாபு நாயுடு 23 எம்.எல்.ஏ.க்களை கால்நடை மந்தையில் விலைக்கு வாங்குவதுபோல் வாங்கினார். ஆனால் ஜெகன் மோகன்ரெட்டி என்னிடம் உங்கள் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்து விட்டு கட்சியில் சேருங்கள் என்று கூறினார். இதுதான் இரு கட்சிக்கும், இரு தலைவர்களுக்கும் உள்ள ஜனநாயக வேறுபாடு.
இம்மாத கடைசியில் முறைப்படி எம்.எல்.ஏ. பதவியையும், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டு ஒய்.எஸ்.ஆர். கட்சியில் இணைவேன்.
அமைச்சர் ஆதிநாராயணா ரெட்டியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறுவதில் உண்மை இல்லை. அது வெறும் புரளிதான்.
இளம் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டிக்கு மக்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர் அரசியல் கடைபிடிக்கும் தூய்மை போன்றவற்றால் தான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #ChandrababuNaidu #MallikarjunaReddy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X