search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோபியானில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்- ராணுவம் அதிரடி
    X

    சோபியானில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்- ராணுவம் அதிரடி

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JKEncounter #Militants
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக ராணுவத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியானில் ஹெப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராணுவத்தினர் அங்கு சென்று, பயங்கரவாதிகள் இருந்த பகுதியை சுற்றி வளைத்து  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



    அப்போது பயங்கரவாதிகள்,  ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. #JKEncounter #Militants 
    Next Story
    ×