search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களவைத் தேர்தலில் பாஜக அரசுக்கு எந்த சவாலும் இல்லை- ராஜ்நாத் சிங்
    X

    மக்களவைத் தேர்தலில் பாஜக அரசுக்கு எந்த சவாலும் இல்லை- ராஜ்நாத் சிங்

    சாமானிய மக்கள், பாஜக அரசு மீது நம்பிக்கை வைத்திருப்பதால் வரும் பொதுத் தேர்தலில் அரசுக்கு எந்த சவாலும் இல்லை என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். #Rajnath #LSPolls
    கிரேட்டர் நொய்டா:

    கிரேட்டர் நொய்டாவில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில், கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டுவதற்கு, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று அடிக்கல் நாட்டினார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, வரும் தேர்தல் பாஜக அரசுக்கு பெரிய சவாலாக இருக்குமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், அரசுக்கு எந்த சவாலும் இல்லை என கூறினார்.

    பின்னர் கொல்கத்தாவில் மம்தா தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் வலிமையை காட்டியது குறித்த கேள்விக்கு பதிலளித்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:-


    பாஜகவின் வெற்றியைப் பார்த்து பயந்துபோனதால், அனைவரும் ஒன்றுசேர்ந்துள்ளனர். பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற பயம் அவர்களுக்கு வந்துவிட்டது. ஆனால் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி. மோடி தலைமையில் நாங்கள் வலுவான பிரபலமான தலைமையை பெற்றிருக்கிறோம். சாமானிய மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

    4.5 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எனவே, வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்த சூழ்நிலை உங்களுக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajnath #LSPolls
    Next Story
    ×