search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்ஜெட்டுக்கு முன்னர் அல்வா கிண்டிய மத்திய மந்திரிகள்
    X

    பட்ஜெட்டுக்கு முன்னர் அல்வா கிண்டிய மத்திய மந்திரிகள்

    மத்திய மந்திரிகள் ஷிவ் பிரதாப் சுக்லா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அல்வா கிண்டி மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) அச்சடிக்கும் பணியை இன்று தொடங்கி வைத்தனர். #budget #HalwaCeremony
    புதுடெல்லி:     

    பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.


    அந்த வகையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி ஷிவ் பிரதாப் சுக்லா, சாலை போக்குவரத்துத்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், நிதித்துறை செயலாளர் சுபாஷ் கார்க் முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது.  #budget #HalwaCeremony 
    Next Story
    ×